Tuesday, February 26, 2019

நாட்டில் உள்ள அதிவேக நெடுஞ்சாலையில் ஏற்படப் போகும் முக்கிய வளர்ச்சி

அதிவேக நெடுஞ்சாலையில், எதிர்வரும் காலங்களில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறையாக மேம்படுத்த, நடவடிக்கை மேற்கொள்ளப்படுவதாக அதிவேக வீதி பராமரிப்பு மற்றும் கண்காணிப்பு பணிப்பாளர் சமன் ஓப்பநாயக்க தெரிவித்தார்.

தற்போது கட்டுநாயக்க அதிவேக வீதியில் இலத்திரனியல் முறையில் பணம் செலுத்தும் முறை நடைமுறையில் உள்ளது. எதிர்வரும் காலங்களில் இந்த முறை நாட்டில் உள்ள சகல அதிவேக வீதிகளிலும் நடைமுறைக்கு கொண்டுவருவதே தமது எதிர்பார்ப்பாகும் என அவர் குறிப்பிட்டார்.

இலத்திரனியல் கொடுப்பனவு முறையை பயன்பாட்டுக்கு கொண்டு வருவதனால் பொதுமக்களுக்கு பல நன்மைகள் கிடைக்குமென அவர் தெரிவித்தார்.

இதற்காக விசேட காட் ஒன்றை அறிமுகப்படுத்தி இதனை அதிவேக வீதியை பயன்படுத்தும் சாரதிகளுக்கு விநிநோகிக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் சமன் ஒப்பநாயக்க மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com