Tuesday, February 26, 2019

இலங்கைக்கு கால அவகாசம் வழங்கும் தீர்மானத்தில் பிரித்தானியா

இலங்கை அரசாங்கத்தின் மனித உரிமை நடவடிக்கைகளை பிரித்தானியா வரவேற்றுள்ளது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரின் ஆரம்ப அமர்வில் உரையாற்றிய பொதுநலவாய மற்றும் ஐக்கிய நாடுகளுக்கான இராஜாங்க அமைச்சர் தரிக் அஹமட் இதனை தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நல்லிணக்க செயற்பாடுகளை பிரித்தானியா ஊக்குவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார். இதன்போது கருத்து தெரிவித்த அவர், பொதுமக்களின் காணிகளை விடுவித்தல் மற்றும் இழப்பீடு வழங்குவதற்கான அலுவலகத்தை நிறுவுதற்கான இலங்கை அரசாங்கத்தின் தீர்மானம் போன்றன வரவேற்கத்தக்கது எனத் குறிப்பிட்டார்.

இதனிடையே, இலங்கை அரசாங்கத்திற்கு மேலதிக கால அவகாசம் வழங்கும் வகையிலான தீர்மானமொன்றை பிரித்தானியா இக்கூட்டத்தொடரில் முன்வைக்க தீர்மானித்துள்ளது. ஆனால், போரினால் பாதிக்கப்பட்ட மக்களோ, பிரித்தானியா மேலதிக கால அவகாசத்தை இலங்கைக்கு வழங்கக் கூடாது என்ற முடிவில் உறுதியாக இருந்து வருகின்றார்கள்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com