Tuesday, February 26, 2019

பொரளை அடுக்குமாடி குடியிருப்பில் தீ

பொரளை- ஷஹஸ்புர பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டத்தின் 11ஆம் மாடியில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

இன்று இந்த அசம்பாவிதம் நிகழ்ந்துள்ளது.
குறித்த தீ பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையில் தீயணைப்பு படையினர் மற்றும் பொலிஸார் தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றனர்.

எவ்வாறான போதிலும் தீ ஏற்பட்டமைக்கான காரணம் இதுவரை தெரியவில்லை. இந்த தீ காரணமாக ஏற்பட்ட சேத விபரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளிவரவில்லை. பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com