Tuesday, February 26, 2019

குற்றமிழைத்தவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் தண்டனையே - லக்‌ஷ்மன் கிரியெல்ல

நாடாளுமன்ற சிறப்புரிமையானது அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் பொதுவானது என்று அமைச்சரும் சபை முதல்வருமான லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.ஹொரவப்பொத்தானை தொகுதி அமைப்பாளர் கூட்டத்தில் பங்கேற்றபோது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போதுள்ள அமைச்சர்களுக்கு எதிராக வகை வகையான குற்றச்சாட்டுக்கள் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மீது முன்வைக்கப்படும் குற்றச்சாட்டு பொய்யானது என்றால், அவர்களை பாதுகாக்க வேண்டியது சபை முதல்வரின் கடமையாகும். இருப்பினும் சில குற்றச்சாட்டுக்கள் சி.ஐ.டிக்கு கையளிக்கப்பட்டுள்ளன. ஆனால் நாடாளுமன்றத்தில் யாரும் கொலை செய்யப்பட்டிருந்தால் அதனை மூடி மறைக்க முடியாது.

அந்தவகையில், நாடாளுமன்றத்திலுள்ள சொத்துக்களுக்கு சேதம் ஏற்படுத்தியவர்கள் எவராக இருந்தாலும் அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும். அவர்கள் அமைச்சர்களாக இருந்தாலும் சிறப்பு சலுகை வழங்க முடியாதென லக்‌ஷ்மன் கிரியெல்ல தெரிவித்தார்.

ஆகவே கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட குழப்பத்தினால் ஏற்பட்ட சொத்துச் சேதங்களுக்கு காரணமானவர்களைத் தண்டிக்க வேண்டும் என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com