Thursday, February 7, 2019

தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணை, இன்று விவாதத்திற்கு இல்லை

இன்று காலை 10.30 மணிக்குக் கூடவுள்ள நாடாளுமன்ற அமர்வில் தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலான பிரேரணையை சமர்ப்பிக்கப்போவதில்லை என்று, சபை முதல்வர் லக்ஸ்மன் கிரியெல்ல அறிவித்துள்ளார். தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபிப்பது தொடர்பிலான பிரேரணையை அடுத்த வாரத்தில் சமர்ப்பிக்க எதிர்ப்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

புதிய தேசிய அரசாங்கமொன்றை ஸ்தாபித்து அமைச்சரவை எண்ணிக்கையை அதிகரிப்பதற்கான செயற்பாட்டை இன்று விவாதம் செய்வதற்கு நேற்றைய கட்சி தலைவர்கள் கூட்டத்தில் தீர்மானிக்கப்பட்டது. இந்த தீர்மானத்திற்கு ஐ தே கட்சியை தவிர வேறு எந்த கட்சியும் ஆதரவு வழங்கவில்லை. எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச, தேசிய அரசாங்கம் தொடர்பான பிரேரணையை தாம் எதிர்ப்பதாக தெரிவித்துள்ளார்.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகளின் கருத்தைப் பொருட்படுத்தாது விவாதத்தை முன்னெடுக்க, ஆளும் ஐக்கிய தேசியக் கட்சி இந்தத் தீர்மானத்தை எடுத்ததாக, மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திசாநாயக்க நேற்றுக் கூறி இருந்தார்

ஆக, ஆளுங்கட்சியின் தீர்மானத்திற்கு அமைய இன்று குறித்த பிரேரணை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டால், அது அதிகாரத்தை முறையற்ற விதத்தில் பயன்படுத்தும் நடவடிக்கையாக அமையும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com