Thursday, February 7, 2019

நாட்டை விட்டு வெளியேறிய பாரிய குற்றவாளிகள் தொடர்பில் சபையில் கேள்வி

நீதிமன்றங்களினால் குற்றஞ்சாட்டப்பட்ட பாரிய குற்றச் செயல்களை மேற்கொண்ட குற்றவாளிகள் எவரும் வெளிநாட்டில் உள்ளனரா? என்பது குறித்த விபரங்களை, சட்ட மா அதிபர் திணைக்களம் வழங்கினால் அவற்றை நாடாளுமன்றத்துக்கு சமர்ப்பிக்க முடியுமென பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.

ஜே.வி.பியின் நாடாளுமன்ற உறுப்பினர் நளிந்த ஜயதிஸ்ஸ எழுப்பிய கேள்வியொன்றுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் நாட்டைவிட்டு வெளியேறி வெளிநாடுகளில் வாழ்ந்து வருகின்றார்கள். இவர்கள குறித்து நளிந்த ஜயதிஸ்ஸ எம்.பி கேள்வியெழுப்பினார்.

பிரதமரின் கேள்வி நேரத்தில் எழுப்பப்பட்ட இந்த வினாவிற்கு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பதிலளிக்கையில், குறித்த குற்றவாளிகள் தொடர்பில் நாட்டிலுள்ள 32 மேல் நீதிமன்றங்கள் மற்றும் 49 நீதிமன்றங்களிலிருந்து விபரங்ககளை பெற்றுக்கொள்ள வேண்டியிருப்பதாக சட்டமா அதிபர் அறிவித்திருப்பதாகவும், அவ்வாறான விபரங்கள் கிடைத்த பின்னர் இந்த விடயம் தொடர்பில் நாடாளுமன்றத்திற்கு தெரியப்படுத்த முடியும் என்றும் பதிலளித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com