Thursday, February 7, 2019

இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு எவ்வித கட்டண அதிகரிப்பும் இல்லை - சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம்

சுங்கத் தொழிற்சங்க நடவடிக்கை காரணமாக தேங்கியுள்ள கொள்கலன்களை அப்புறப்படுத்துவதற்கு விசேட பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. கொள்கலன்களை அகற்றும் நடவடிக்கையை விரைவாக மேற்கொள்வதற்கு அனைத்துத் தரப்பிலிருந்து அதிகபட்ச ஊழியர்களை இணைத்துக் கொண்டுள்ளதாக, சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் விபுல மினுவம்பிட்டிய தெரிவித்துள்ளார்.

இத்துடன், குறித்த கொள்கலன்கள் அகற்றப்படாமை காரணமாக அதற்காக பெருமளவு நிதி செலவிட வேண்டியுள்ளதாக, சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் ஜீ. ராஜேந்திரன் கூறியுள்ளார். இதனிடையே, இறக்குமதி செய்யப்படுகின்ற பொருட்களுக்கு எவ்வித கட்டணமும் அதிகரிக்கப்படமாட்டாது என சுங்க அலுவலக அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com