Monday, February 25, 2019

யாழில் தேடுதல் வேட்டை ஆரம்பம்

அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தின் பல இடங்களில், வன்முறைச் சம்பவங்கள் அதிகமாக இடம்பெற்று வருகின்றன. எனவே யாழ்ப்பாணத்தில் அதிகரித்து வரும் வன்முறைச் சம்பவங்களை தணிக்க, மீண்டும் வீதிச் சோதனை மற்றும் விசேட தேடுதல் நடவடிக்கைகளில் பொலிஸார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

வீசேடமாக கொக்குவில், இணுவில், தாவடி போன்ற பகுதிகளில் பொலிஸாரின் கண்காணிப்பு மற்றும் வீதிச் சோதனை நடவடிக்கைகள் தீவிரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

அத்துடன் காங்கேசன் துறை வீதி, பலாலி வீதி, மானிப்பாய் வீதி, பிறவுன் வீதி மற்றும் பருத்தித்துறை வீதிகளில் ஆங்காங்கே பொலிஸார் குவிக்கப்பட்டு கண்காணிப்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் இடமேறும் வன்முறைச் சம்பவங்களால்,மக்கள் மிகுந்த அச்சத்துடன் இருந்த நிலையில், இந்த தேடுதல் வேட்டை ஆரம்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com