Monday, February 25, 2019

மகிந்தானந்த அளுத்கமகேயின் புதல்வர் உள்ளிட்ட 07 பேருக்கு பிணை

கொழும்பு - பம்பலப்பிட்டி பகுதியில் பொலிஸ் உயர் அதிகாரி ஒருவரை, தனது வாகனத்தால், மோதிச் சென்ற சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகேயின் புதல்வர் உள்ளிட்ட 07 பேர் பிணையில் விடுக்கப்பட்டுள்ளதாக, தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய நால்வர் இன்றைய தினம் அதிகாலையில் கைது செய்யப்பட்டு, நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே, இந்த பிணை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை குறித்த வாகனத்தை செலுத்திய சாரதியை எதிர்வரும் மார்ச் 11 வரை விளக்கமறியல் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com