Sunday, February 17, 2019

மட்டக்களப்புபில் புதையல் தோண்டிய புலிகளின் பெண் தளபதி உள்ளிட்ட 8 பேர் கைது

மட்டக்களப்புபில் இயந்திரம் மூலம் புதையல் தோண்டிய முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவர் உட்பட 8 பேரை பொலீசார் கைது செய்துள்ளனர். கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள காரைக்காடு காட்டுபகுதியில் குறித்த எண்மரும் நேற்று இரவு கைது செய்யப்பட்டதுடன் இயந்திரம் ஒன்றை மீட்டுள்ளதாக கரடியனாறு பொலிஸார் தெரிவித்தனர்.

பொலிஸ் புலனாய்வு பிரிவுக்கு கிடைத்த தகவல் ஒன்றினையடுத்து மேற்கொண்ட விசாரணைகளின் போதே இவ்வர்கள் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் அதே பகுதியைச் சேர்ந்த முன்னாள் விடுதலைப் புலிகளின் மகளீர் அணி தளபதி ஒருவரும், சிங்களவர் ஒருவர் உள்ளிட்ட 5 பேர் ஏறாவூர் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் எனவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்தோடு இவர்களை நீதிமன்றில் ஆஜர்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com