Sunday, February 17, 2019

மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு சென்றார் பிரதி அமைச்சர் புத்திக பத்திரன

மன்னார் மாந்தை உப்புக்கூட்டுஸ்தாபனத்திற்கு பிரதி அமைச்சர் புத்திக பத்திரன விஜயம் செய்துள்ளார். மன்னார் மாந்தை உப்புக் கூட்டுஸ்தாபனத்திற்கு சென்ற கைத்தொழில் மற்றும் வர்த்தக பிரதி அமைச்சர் புத்திக பத்திரன அங்குள்ள நிலமையினை நேரடியாக அவதானித்திருந்தார்.

மேலும் உப்புக் கூட்டுஸ்தாபனத்தின் முகாமையாளர் உள்ளிட்ட அதிகாரிகளைச் சந்தித்து உரையாடியதோடு, அங்குள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாக பிரதி அமைச்சர் வாக்குறித்து வழங்கினார். அமைச்சர் றிஸாட் பதியுதீனின் பிரத்தியேக செயலாளர் றிப்கான் பதியுதீனின் வேண்டுகோளுக்கு அமைவாக அமைச்சர் மன்னாருக்கான விஜயத்தினை மேற்கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com