Tuesday, January 15, 2019

தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை !

இலங்கை தனியார் பஸ் உரிமையாளர்கள் சங்கம் அரசாங்கத்திற்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. காபன் வரி அறவிடும் அரசாங்கத்தின் புதிய திட்டத்தை உடனடியாக மாற்றிக் கொள்ள வேண்டும் என்றே இந்த எச்சரிக்கை செய்யப்பட்டுள்ளது.

காபன் பரிசோதனை வரியை எரிபொருள் சூத்திரம் ஒன்றை அரசாங்கம் அறிமுகம் செய்தபோதே சேர்த்திருக்க வேண்டும். இந்த அரசாங்கம் இதுவரையில் அறிமுகம் செய்த புதிய விடயங்களில் பலதும் பாரிய பிரச்சினையுள்ளன. இதேபோன்ற ஒரு அம்சமாகவே இந்த காபன் வரி காணப்படுகின்றது.

எனவே தனியாக காபன் வரி என்ற ஒன்று அவசியமற்றதாகும். மேலும், நாம் பயணங்களுக்கு பயன்படுத்தாது இருக்கும் வாகனங்களுக்கும் இந்த வரியை அறவிடுவது நியாயமான ஒன்றா? என்பதை, இவ்வரி தொடர்பில் ஆலோசனை வழங்கியவர்கள் கருத்தில் கொள்ளாதது ஏன்? எனவும் கெமுனு விஜேரத்ன கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com