Tuesday, January 15, 2019

நாற்றம் எடுக்கிறது யாழ் மா நகரம். ஆனோல்டுக்கு எதற்கு மலர் மாலை? போடுங்கள் குப்பை மாலை!

நாட்டில் கட்டமைப்புக்கள் , வரையறைகள் , ஆணைகள் , கடமைகள் என உண்டு. இவற்றை நேர்த்தியாக கடைப்பிடிப்பதன் ஊடாகவே வளமானதோர் நாட்டை மட்டுமல்ல சமூதாயத்தையும் கட்டியெழுப்ப முடியும் என்பது யாவரும் அறித்த விடயம்.

இந்த அடிப்படையில் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள பிரதானமான ஆணை என்பது நகரை சுத்தமாக வைத்திருத்தல். சுத்தமான தமிழில் சொல்வதானால் உள்ளுராட்சி சபைகளுக்கு வழங்கப்பட்டுள்ள ஆணை யாதெனில் கழிவு அகற்றல், துப்பரவை பேணுதல்.

உலகின் கவனத்தை ஈர்த்த நகரங்களை எடுத்துக்கொண்டால் அவை அதன் துப்பரவினால் அந்த இலக்கை அடைந்துள்ளது. அத்துடன் அந்த நகரில் வாழுகின்ற மக்களும் ஒர் ஒழுக்கமுள்ள சமூகமாக , ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்படுகின்ற சமூகமாக, நாட்டுப்பற்றுள்ள சமூகமாக, சமூதாய உணர்வுள்ள சமூகமாக வளர்கின்றது.

மேற்படி கடமையை செய்வதற்காகவே (குப்பபை அள்ளுவதற்காக) கடந்த வருடம் மார்ச் மாதத்தில் ஒரு குழுவை மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். அக்குழுவுக்கு தலைமை தாங்கும் பொறுப்பை தமிழரசுக் கட்சி இமானுவல் ஆனோல்ட் என்பவருக்கு வழங்கியிருக்கின்றது.

அதாவது யாழ் மாநகர சபையின் எல்லை பகுதியில் வசிக்கும் சுமார் 92 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்பாளர்களின் நகர சுகாதாரத்தை பாதுகாக்கும் பொருட்டு குப்பை அள்ளும் பணிக்காக மக்கள் என்ற தொழில் வழங்குநர்களால் புதிய நியமனம் பெற்றார் இமானுவல் ஆனோல்ட்.

கடந்த மார்ச் மாத இறுதியில் பதவியேற்ற ஆனோல்ட் இதுவரை தனக்கு வழங்கப்பட்டுள்ள குப்பை அள்ளும் பணியை விட்டுவிட்டு , நாடு நாடாக பறந்து அலைவதை அவதானித்தோம். அவ்வாறு அவர் பறந்து நகரங்களின் சுத்தம் , சுகாதாரம் , அழகு , வடிவமைப்பு, ஒழுங்கு , நீதி தொடர்பில் மக்களுடன் கலந்தாலோசித்தாரா என்று தேடினால், இல்லை அவர் பேசியது முழுக்க இலங்கையில் அரசியல் தீர்வு சம்பந்தமான விடயங்கள்..

ஐசே ஆனோல்ட் உம்மை நியமித்தது குப்பை அள்ள, வடிகால்களை துப்புரவு செய்ய, கட்டாக்காலி நாய்களை கட்டுப்படுத்த, பராமரிப்பற்ற கால்நடைகளை பராமரிக்க என ஒரு வேலைத்திட்டத்திற்காக. ஆனால் அது உமது கண்ணுக்கு தெரியவில்லையாயின் இங்கே சில படங்களை பாரும்.






இவ்வாறு யாழ் நகரம் இருக்கின்றபோது, ஆனோல்ட்க்கு மலர்மாலை வேறு போட்டு வரவேற்கின்றது தமிழ் சமூகம்.. உள்ளுராட்சி சபையை நிர்வகிப்பதற்கு ஆணையை வழங்கிவிட்டு அந்த கடமையை நிறைவேற்றாதாபோது குப்பையை சேகரித்து மாலைகட்டி சம்பந்தப்பட்டடவர்களின் கழுத்தில் மாலையாக சூடுவதை விடுத்து மலர்மாலை போடுமாக இருந்தால், தமிழ் சமூகத்திற்கு தந்தை செல்வா சொன்னதைத் தான் மீண்டும் சொல்லவேண்டும்.. 'கடவுள் தான் காப்பாற்ற வேண்டும்.'

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com