Tuesday, January 15, 2019

ஆய்வுகளுக்காக பல்கலைக் கழகங்களை பாராட்டுகின்றார் ரவுப் ஹக்கீம்

அனர்த்த அபாயங்களை குறைப்பதற்கான கல்விசார் ஆய்வுகளில் பல்கலைகழகங்கள் ஈடுபடுவது போற்றத்தக்க செயல் என்று உயர்கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் பாராட்டியுள்ளார். கொழும்பில் இன்று சர்வதேச ஆய்வு மாநாடு நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு கருத்துரைத்த போது உயர்கல்வி அமைச்சர் மேற்படி தெரிவித்தார்.

ஐ நாவின் நிலைபேறான அபிவிருத்தி இலக்குகளை கையாள்வதற்கு அனர்த்த அபாயங்களை குறைப்பது தொடர்பிலான கல்விசார் ஆய்வுகளில் பல்கலைக்கழகங்கள் ஈடுபடுவது வரவேற்கத்தக்க செயல் ஆகும். அத்துடன், பல்கலைக்கழகங்கள் ஒன்றிணைத்து செயல்படுத்தும் அர்த்த முகாமைத்துவ ஆளுமை விருத்தி மற்றும் புத்தாக்கம் தொடர்பான சர்வதேச மாநாடு மிகவும் பயன் உள்ளது என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com