Tuesday, January 15, 2019

ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் தேர்தலுக்கு அஞ்சாது - அமைச்சர் சந்திராணி பண்டார

ஐக்கிய தேசிய கட்சி ஒரு போதும் தேர்தலுக்கு அஞ்சாது என்று அமைச்சர் சந்திராணி பண்டார தெரிவித்துள்ளார். அனுராதாபுரத்தில் நிகழ்வொன்றில் பங்கேற்றபோது இவ்வாறு கூறினார். ஐக்கிய தேசிய கட்சி மக்களுக்கு தேவையான அனைத்து வேலைகளையும் செய்துள்ளது என்று தெரிவித்த அவர், அனைவரது யோசனையையும் உள்வாங்கியே புதிய அரசியல் அமைப்பு கொண்டுவரப்படும் என்றும் அமைச்சர் சந்திராணி பண்டார இதன்போது தெரிவித்தார்.

இதனிடையே புதிய அரசியல் அமைப்பு எவ்வாறு கொண்டுவரப்பட்டாலும் நாட்டின் ஒருமைப்பாடு பாதுகாக்கப்படும் என்று அமைச்சர் ரவி கருணா நாயக்க தெரிவித்துள்ளார். மேலும் பௌத்த மதத்திற்கு முன்னுரிமை வழங்கப்பட்டு, ஏனைய மதங்களுக்கும் சம உரிமை வழங்கப்படும் என்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார். கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் பங்கேற்றபோது அவர் மேற்படி தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com