Tuesday, January 15, 2019

போர் வீரர்களை எந்த நீதிமன்றுக்கும் அனுமதிக்க மாட்டோம். ஐ.தே.க

இந்நாட்டினை பயங்கரவாதத்திலிருந்து காப்பாற்றிய எமது போர் வீரர்களை எந்த நீதிமன்றுக்கு கொண்டு செல்லவும் நாம் அனுமதிக்க மாட்டோம் என நீதி அமைச்சர் தலதா அத்துக்கொரல தெரிவித்துள்ளார்.

ரத்தினபுர கஹவத்த பிரதேசத்தில் இடம்பெற்ற பொது நிகழ்வொன்றில் மக்கள் மத்தியில் பேசும்போது மேற்கண்டவாறு கூறியுள்ள அவர், எமது படைவீரர்களை நீதிமன்றுகளுக்கு கொண்டு செல்ல ஐக்கிய தேசியக் கட்சி அனுமதித்துவிடும் என்று பல்வேறு பட்ட கட்சிகள் பொய்ப் பிரச்சாரங்களை செய்கின்றார்கள். ஆனால் நான் இன்று ஐக்கி தேசியக் கட்சியின் அமைச்சராக இவ்விடத்தில் நின்று கூறுகின்றேன், எமது வீரர்களை நாம் எந்த நீதிமன்றுக்கும் கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என்று கூறியுள்ளார்.

படை வீரர்களுக்கு எதிரான விசாரணைகள் சர்வ தேச நீதிபதிகள் மத்தியில் இடம்பெறவேண்டும் என வேண்டுதல் விடுக்கப்படும் இத்தருணத்தில்தான், அமைச்சர் மிகத் தெளிவாக மேற்படி கருத்தை தெரிவித்துள்ளார். அமைச்சரின் கருத்தின் பிரகாரம் சர்வதேச நீதிபதிகள் அல்ல உள் நாட்டு நீதிபதிகள் முன்னிலையில் கூட படை வீரர்கள் நிறுத்தப்படமாட்டார்கள் என்பதாகும்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com