Tuesday, January 22, 2019

துப்பாக்கிகளைக் கைபற்றுவோருக்கு சன்மானம்! பொலிஸ் தலைமையகத்தின் விஷேட அறிவிப்பு.

சட்ட விரோத துப்பாக்கிகளைக் கைபற்றுவோருக்கு பொலிஸ் நன்கொடை நிதியத்தினூடாக சன்மானம் வழங்கத் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஜனவரி மாதம் முதலாம் திகதி ஆரம்பமான இந்த நடவடிக்கை, மார்ச் மாதம் 31 ஆம் திகதி வரையிலான காலப்பகுதி வரை தொடரவுள்ளது.

இதற்கமைய, T-56 ரக துப்பாக்கியை சட்ட விரோதமாக வைத்திருப்போரைக் கைது செய்யும் பொலிஸ் உத்தியோகத்தருக்கு 50 ஆயிரம் ரூபாவும், தனியார் உளவாளிக்கு 20 ஆயிரம் ரூபாவும், சந்தேக நபர் இன்றி T-56 ரக துப்பாக்கியை மாத்திரம் கைப்பற்றுவோருக்கு 10 ஆயிரம் ரூபாவும் தனியார் உளவாளிக்கு 5 ஆயிரம் ரூபாவும் வழங்க, பொலிஸ் தலைமையகம் தீர்மானித்துள்ளது. பொலிஸ் நன்கொடை நிதியத்திலிருந்து சன்மானத்தை வழங்குவதற்கு, பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் அனுமதி பெறப்பட்டுள்ளதாகவும், பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com