Tuesday, January 22, 2019

மஹா பொல புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ளும் மாணவர்கள் கவனத்திற்கு!

மாணவர்கள் தமது வங்கிக் கணக்குகள் ஊடாக மஹாபொல புலமைப்பரிசில்களை பெற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக, மஹாபொல புலமைப்பரிசில் நிதியம் தெரிவித்துள்ளது. மஹாபொல புலமைப்பரிசில் நிதியத்தின் பணிப்பாளர் பராக்ரம பண்டார இதனைத் தெரிவித்துள்ளார்.

மஹாபொல புலமைப்பரிசில் பெறும் மாணவர்களுக்கான பணத் தொகைகளை மாணவர்களின் வங்கிக் கணக்கிற்கு வைப்பிலிட்டதன் பின் குறுந்தகவலூடாக அதனை தெரியப்படுத்தவுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார். அத்துடன், மஹாபொல புலமைப்பரிசில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் தொடர்ந்தும் பல்கலைக்கழகங்கள் ஊடாகவே மேற்கொள்ளப்படும் எனவும் அவர் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com