Tuesday, January 22, 2019

90 கிலோ கிராம் ஹெரோயினுடன் 2 அமெரிக்கர்கள் மற்றும் 1 ஆப்கானிஸ்தர் கைது!

கொள்ளுப்பிட்டி பிரதேசத்திலுள்ள ஆடம்பர வீடொன்றில் வைத்து 1080 மில்லியன் பெறுமதியான ஹெரோயின் ரக போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளதுடன் 5 சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் இருவர் அமெரிக்கப் பிரஜைகள் என்பதுடன் ஒருவர் ஆப்கானிஸ்தர் ஆகும். ஏனைய இருவரும் ஹிக்கடுவ பிரதேசத்தை சேர்ந்த இலங்கையர்கள் என தெரியவருகின்றது.

விசேட அதிரடிப் படையினர் மற்றும் போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் இணைந்து மேற்கொண்ட நடவடிக்கையில் மேற்படி மீட்பு இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் பேச்சாளர் றுவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

குறித்த போதைப்பொருள் ஒவ்வொன்றும் 1 கிலோ எடையுள்ள 90 பக்கட்டுக்களில் பொதி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே மீட்கப்பட்டுள்ளது.

இரு அமெரிக்கர்களும் 29 மற்றும் 43 வயதுடையவர்கள் என்றும ஆப்கானிஸ்தர் 41 வயதுடையவர் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

இதேநேரம் ஹட்டன் பிரதேசத்தில் நேற்று பிற்பகல் இரு ஜேர்மனிய யுவதிகள் ஹெரோயின் மற்றும் என்சி என்ற போதை பொருளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சுற்றிலாவிற்காக இலங்கை வந்துள்ள இவர்கள், வாடகைக்கு கார் ஒன்றினை பெற்று நுவரெலியாவில் இருந்து கொழும்பு நோக்கி சென்றுகொண்டிருந்த வேளையில் அட்டன் மல்லியப்பு சந்தியில் வைத்து பொலிஸாரினால் சோதனைக்குட்படுத்தப்பட்டபோது, மாட்டிக்கொண்டுள்ளனர்.




0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com