Tuesday, January 29, 2019

வடக்கில் உயர்தரத்துடன் கூடிய ரயில் மற்றும் பஸ் சேவைகளை பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதம் - அர்ஜுண ரணதுங்க

வடக்கில் போக்குவரத்துப் சேவை தொடர்பான பேச்சுவார்த்தை எதிர்வரும் 2 மாதங்களில் நடத்தப்படும் என்று அமைச்சர் அர்ஜுண ரணதுங்க யாழ்ப்பாணத்தில் உள்ள இலங்கை போக்குவரத்து சபையின் டிப்போ ஊழியர்களை சந்தித்தபோது தெரிவித்துள்ளார்.

வடக்கில் நிலவும் போக்குவரத்துப் பிரச்சினைகள், ஊழியர்களின் பிரச்சினைகள் குறித்து உரிய தீர்வை விரைவில் பெற்றுத் தருவதாக அவர் அங்கு குறிப்பிட்டார். வடக்கு மற்றும் தென்பகுதி மக்கள் ஒன்றிணைந்து வாழக்கூடிய முறை ஒன்றை அரசாங்கம் ஆரம்பித்திருப்பதாக தெரிவித்த அமைச்சர் அர்ஜுண ரணதுங்கவடக்கின் அபிவிருத்தி துரிதப்படுத்தப்பட்டுள்ளது என்றும் கூறினார்.

உயர்தரத்துடன் கூடிய ரயில் மற்றும் பஸ் சேவைகளை வட மாகாணத்திற்கு பெற்றுக்கொடுக்கும் நடவடிக்கைகள் துரிதப்படுத்தப்பட்டுள்ளன என்றும் அவர் இதன்போது குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com