Tuesday, January 29, 2019

போதைப்பொருள் தொடர்பில் முறைப்பாடு அளிக்கும் தொலைபேசி அழைப்பிற்கு இதுவரை அதிக அழைப்புக்கள் - பொலீசார்

எதிர்வரும் 2 வாரங்களில் நாட்டில் போதைப்பொருள் வியாபாரம் மற்றும் பாவனையைத் தடுப்பதற்காக சிறப்பு செயற்றிட்டங்கள் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நடவடிக்கைகள் தொடர்பில் பாதுகாப்பு செயலாளர் ஊடாக அறிந்து கொள்ள முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த வாரம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அறிமுகப்படுத்தப்பட்ட போதை பொருள் தொடர்பிலான முறைப்பாடுகளை தெரிவிக்கும் பிரத்தியேக தொலைபேசி இலக்கத்திற்கு இதுவரையில் 60ற்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் கிடைக்கப் பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதனிடையே கடந்த வருடம் ஒக்டோபர் மாதம் முதல் நடப்பாண்டின் ஜனவரி 20ஆம் திகதி வரை இலங்கையில் 800 KGற்கும் அதிக ஹெரோயின் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கடத்தல்கள் மற்றும் வியாபாரங்களில் ஈடுபட்ட 5,000க்கும் அதிகமானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்களில் 10 பேர் வௌிநாட்டுப் பிரஜைகள் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com