Tuesday, January 29, 2019

கொள்ளுப்பிட்டி விவகாரம் - ஆப்கானிஸ்தான் பிரஜை தொடர்பில் வெளியாகிய அதிர்ச்சி தகவல்

கொள்ளுபிட்டி பகுதியில் போதைப்பொருள் வியாபாரம் தொடர்பில் கைது செய்யப்பட்ட வௌிநாட்டுப் பிரஜைகள் உள்ளிட்டோர் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர். கடந்த வாரம் கைது செய்யப்பட்ட குறித்த சந்தேகநபர்கள் இதுவரை நாளும் தடுத்துவைக்கப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்டனர்.

பொலிஸாரால் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில் ஆப்கானிஸ்தான் பிரஜை பிரதான சந்தையில் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈடுபட்டு வந்துள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

இதற்கு முன்னரும் நாட்டில் போதைப்பொருள் கடத்தல் தொடர்பில் கைது செய்யப்பட்ட பலருக்கு குறித்த ஆப்கானிஸ்தான் பிரஜையே போதைப்பொருட்களை வழங்கி வந்தமை விசாரணைகளை மூலம் வெளிவந்துள்ளது.

கொள்ளுப்பிட்டி விவகாரத்தின் போது கைது செய்யப்பட்ட அமெரிக்க பிரஜைகள் தொடர்பிலும் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. அத்துடன் போதைப்பொருள் கொள்வனவிற்காக இவர்களிடம் ஒரு இலட்சத்திற்கும் அதிக பணம் வழங்கப்பட்டுள்ளமை தெரியவந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com