Monday, January 14, 2019

சுதந்திர கட்சி, பெரமுன தலைவர்கள் எதிர்வரும் தேர்தலில் எம்முடன் இணைகிறார்கள் - அக்கிலவிராஜ் திருப்பம் மிகு கருத்து

நடைபெறவுள்ள தேர்தல் ஒன்றின்போது யாரும் எதிர்பாராத தலைவர்கள் ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்துகொள்வார்கள் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் அகில விராஜ்காரியவசம் தெரிவித்துள்ளார்.

யாப்பகுவ தொகுதியின் கட்சிக் கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையில் அவர் இதனைக் கூறியுள்ளார். நாட்டில் அடுத்துவரும் தேசிய தேர்தல் ஒன்றின் போது ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியிலிருந்தும், பொதுஜன பெரமுனவிலிருந்தும் மக்கள் எதிர்பாராத தலைவர்கள் எம்முடன் வந்து இணைவார்கள். குறித்து வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் எம்முடன் பேச்சுவார்த்தை நடாத்தி வருகின்றனர். ஆகவே தேசிய மட்ட தேர்தல் ஒன்று வரும்போது அவர்கள் எம்முடன் வந்து அமர்ந்து கொள்வார்கள் என்று அகிலவிராஜ் காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com