Monday, January 14, 2019

வடகிழக்கில் 10 ,000 வீடுகள் பொங்கலோடு நிர்மாணம்

வட கிழக்கு மாகாணங்களில் நிர்மாணிக்கப்படவுள்ள 10 ஆயிரம் வீட்டு திட்டங்களின் முதற்கட்ட பணிகளை எதிர்வரும் தைப்பொங்கல் தினத்துடன் ஆரம்பமாகவுள்ளதாக தேசிய கொள்கைகள் , பொருளாதார விவகாரங்கள் , மீள்குடியேற்றம். புனர்வாழ்வு , வடக்கு அபிவிருத்தி அமைச்சின் ஊடக அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

முதல் கட்ட பணியின்போது 4 ஆயிரத்து 750 வீட்டுக்கள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கான நிதி மாவட்ட செயலகங்களுக்கு இடைக்கால ஒதுக்கீட்டின் மூலம் ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்கமைய யாழ்ப்பாண மாவட்டத்திற்கு 1500 வீடுகள், கிளிசிநொச்சியில் 670 வீடுகள், முல்லைத்தீவில் 630 வீடுகள், வவுனியா 450 வீடுகள், மன்னாரில் 350 வீடுகள், மட்டக்களப்பில், 625 வீடுகள், திருகோண மலையில் 400 வீடுகள், அம்பாறையில் 125 வீடுகள் அமையப்பெறும்

குறித்த வீடுகள் மக்களின் பாரம்பரிய வீடுகள் என்று வகைப்படுத்தப்படும் கல்வீடுகளாக அமையும் அதேநேரம், யுத்தத்தினால் இந்தியா போன்ற வெளிநாடுகளில் தங்கி இருந்து மீண்டும் நாட்டிற்கு அழைத்து வரப்பட்டவர்களுக்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் என்று அமைச்சின் செயலாளர் சிவஞானசோதி தெரிவித்தார். பயனாளிகள் தெரிவின் போது பெண் தலைமைத்துவ குடும்பங்கள் , மாற்றுத்திறனாளிகளை கொண்ட குடும்பங்கள், காணாமல் போனோரை கொண்ட குடும்பங்களுக்கு முன்னுரிமை அடிப்பைடையில் இந்த வீடுகள் வழங்கப்படும்.

இந்த வீடுகள் அனைத்தும் 550 சதுர அடி பரப்பில் கட்டப்படும். இதற்கான கொடுப்பனவுகள் கட்டம் கட்டமாக வழங்கப்படும். இதற்கு அமைய வீடு ஒன்றிற்கு 10 லட்சம் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com