Monday, January 14, 2019

ஐ நாவில், மார் 20 ல் இலங்கை தொடர்பிலான விவாதம்

இலங்கை குறித்த பாரிய விவாதம் ஒன்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் எதிர்வரும் மார்ச் மாதம் 20 ம் திகதி இடம்பெறவுள்ளதென ஜெனிவா மனித உரிமைகள் பேரவையின் பேச்சாளர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஐ நாவின் மனித உரிமைகள் பேரவையின் 40 வது அமர்வுகள் எதிர்வரும் பெப்ரவரி மாதம் 25 ம் திகதி முதல் மார்ச் மாதம் 22 ம் திகதி வரையான சுமார் 25 நாட்கள் நடைபெறவுள்ளன. ஜெனிவாவில் நிறைவேற்றிய தீர்மானங்களை மார்ச் மாதத்திற்குள் நடைமுறைப்படுத்துவதாக இலங்கை வாக்குறுதி வழங்கி இருந்தது.

இதன்படி 40 வது ஜெனிவா மாநாட்டில் இலங்கையும் பங்கேற்கின்றது. இந்த மாநாட்டில் இலங்கை குறித்த அறிக்கையை மனித உரிமைகள் ஆணையாளர் சமர்ப்பிப்பார் என்று எதிர்பார்க்கப்படுகின்றது. இவ்வாறு சமர்ப்பிக்கப்படும் அறிக்கைகள் தொடர்பிலான முக்கியத்துவம் மிகு விவாதம் மார் 20 ல் இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com