Monday, January 14, 2019

ஒரு கோடியில் ஒரு சதமும் எடுக்கமாட்டோம் - ரில்வின் சில்வா

அண்மையில் நீதிமன்றத்தின் தீர்ப்பின்படி விமல் வீரவன்சவினால் ஒப்படைக்கப்படவுள்ள ஒருகோடி ரூபாய் நஷ்டஈட்டுத் தொகையை, மக்கள் பணிக்காகச் செலவிடப்போவதாக மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா குறிப்பிட்டுள்ளார்.

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவர் விமல் வீரவன்ச, ஜேவிபியின் புலமைச் சொத்துக்களைக் கையாடி புத்தகமொன்றை வெளியிட்ட குற்றத்திற்காக, வர்த்தக மேல் நீதிமன்றம் மனுதாரருக்கு விமல் வீரவன்ச ஒரு கோடி ரூபாயை இழப்பீடாக வழங்க வேண்டுமென தீர்ப்பு அறிவித்திருந்தது. இந்த தீர்ப்பு கடந்த வெள்ளிக்கிழமை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், குறித்த தீர்ப்புக் குறித்து மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வாவிடம் வினவிய போதே ரில்வின் சில்வா இவ்வாறு கூறினார்.

விமல் வீரவன்சவினால் வழங்கப்படும் நஷ்டஈட்டுத் பணத்தில் தாம் ஒரு சதத்தைக் கூட எடுக்கப்போவதில்லையெனவும் முழுப்பணத்தையும் மக்கள் பணிக்காகவே செலவிட போவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com