Friday, January 18, 2019

தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகளை விசாரிக்க ஆணைக்குழு நியமனம்

ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி உபாலி அபேரத்ன தலைமையில், தற்போதைய அரசாங்கத்தின் ஊழல் மோசடிகள் குறித்து விசாரணை செய்ய, ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது. ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ள நிலையில், ஐந்து உறுப்பினர்களை உள்ளடக்கி இந்த ஆணைக்குழு செயற்படும் என்று ஜனாதிபதி ஊடகப் பிரிவு அறிவித்துள்ளது.

கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 15ம் திகதி முதல் 2018ம் ஆண்டு டிசம்பர் 31ம் திகதி வரையான காலத்தில் அரசாங்கத்தில் இடம்பெற்ற ஊழல் மோசடிகள் குறித்து விசாரிப்பதற்காகவே இந்த ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com