Friday, January 18, 2019

9000 கோடியை வழங்கியது மத்திய வாங்கி

அரச திறைசேரிக்கு இலங்கை மத்திய வங்கியிடமிருந்து 9000 கோடி நிதி ரூபா பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு அறிவித்துள்ளது. இந்த ஆண்டுக்காக திறைசேரிக்கு கிடைக்க வேண்டிய சர்வதேச நிதி உரிய நேரத்தில் கிடைக்கவில்லை. இதன் காரணாமாக 2019 ஆம் ஆண்டுக்கான அரச செலவீனங்களுக்காக நிதி, மத்திய வங்கியிடமிருந்து பெறப்பட்டுள்ளதாக நிதி அமைச்சு குறிப்பிட்டுள்ளது.

கடந்த வருடத்தின் இறுதிப்பகுதியில் நாட்டில் ஏற்பட்ட நெருக்கடி நிலைமை காரணமாக இலங்கைக்கு கிடைக்க வேண்டிய பெருந்தொகையான நிதி கிடைக்காது போயுள்ளதாகவும், இதனாலேயே கடந்த ஆண்டு இறுதியில் வரவு செலவு திட்டத்தையும் தயாரிக்க முடியாது போனதாகவும் நிதி அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.

மேலும், அரசாங்கத்துக்கு கிடைக்கப் பெறவுள்ள சர்வதேச கடன் உதவிகள் கிடைக்கப் பெற்றவுடன், மத்திய வங்கி இடம் இருந்து பெறப்பட்ட கடன் தொகை திருப்பிச் செலுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com