Friday, January 18, 2019

இளைஞனுக்கு மரண தண்டனை - காரணம் இதுதான்

கொக்கைன் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட 28 வயதான குற்றவாளி ஒருவருக்கு கொழும்பு மேல் நீதிமன்றம் மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்ததுள்ளது.

62 கிராம் 620 மில்லிகிராம் நிறையுடைய கொக்கைன் போதைப்பொருளை கடத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக சட்டமா அதிபரினால் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. குறித்த நபர் மீது சுமத்தப்பட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் நிரூபிக்கப்பட்டமையால், நீதிபதி கிஹான் குலதுங்க நேற்று மரணதண்டனை தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டார்.

2012 ஆம் ஆண்டு கொஹூவளை பகுதியில் நடத்திய சுற்றிவளைப்பில் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவினரால் குறித்த நபர் கைது செய்யப்பட்டிருந்தார். இவர், கொஹூவளை பகுதியைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தை என்பது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com