Thursday, January 17, 2019

மத்திய கிழக்கு நாடுகளில் வீட்டுப்பணிப் பெண்கள் படும் துயரம்! வீடியோ

வீட்டுப்பணிப்பெண்களாக மத்திய கிழக்கு நாடுகளுக்கு மூன்றாம் உலக நாடுகள் பலவற்றிலிருந்து லட்சக்கணக்கான பெண்கள் செல்கின்றனர். அவ்வாறு அங்கு செல்வோரில் பெரும்பாலானோர் இன்னோரன்ன தொல்லைகளுக்கு முகம் கொடுக்கின்றனர்.

எஜெமானர்களின் தொல்லைகள் உட்பட்ட பல்வேறு தொல்லைகளையும் தாங்க முடியாது வீடுகளிலிருந்து வெளியேறிச் செல்லும் பணிப்பெண்கள் அங்கே இடைத்தங்கல் முகாம்களில் தங்கவைக்கப்படுகின்றனர்.

இடைத்தங்கல் முகாம்களிலும் அவர்களுக்கு நியாயம் கிடைப்பதில்லை. அத்துடன் இலங்கை இந்தியா போன்ற நாடுகளின் தூதுவர்களும் இவ்வாறு பாதிக்கப்பட்ட மக்களுக்கான நீதியை பெற்றுக்கொடுப்பதில் அர்ப்பணிப்புடன் செயற்படுவதில்லை.

இந்நிலையில் சவுதி அரேபியாவில் ரியாத் நகரில் இடைத்தங்கள் முகாமொன்றில் தங்கவைக்கப்பட்டுள்ள பெண்கள் வெளியாரின் உதவியை நாடுகின்றனர்.

அவர்களின் வேண்டுதல்களுக்கு செவிமடுத்து இதனை பகிர்வதன் ஊடாக பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவிகள் கிடைக்கும் வாய்ப்பு கிட்டலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குறிப்பாக முஸ்லிம்கள் அல்லாதோருக்கு மத்திய கிழக்கு நாடுகள் பாதுகாப்பு அற்றதோர் தேசம் என்றும் அங்கு செல்லுகின்ற இலங்கை முஸ்லிம்களைக்கூட அரபுக்கள் இஸ்லாமியர்களாக ஏற்றுக்கொள்வதில்லை என்றும் பரவலாக கூறப்படுகின்றது.






0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com