Thursday, January 17, 2019

கதிர்காமரின் கொலையுடன் தொடர்புடைய புலிப்பயங்கரவாதி ஒருவர் ஜேர்மனியில் கைது.

விடுதலைப் புலிகளின் உறுப்பினர் என்ற சந்தேகத்தின் பேரில், ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஜேர்மன் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

2005 ஆம் ஆண்டு இலங்கை வெளியுறவு அமைச்சர் லக்ஷ்மன் கதிர்காமர் படுகொலை சம்பவத்தில், குறித்த சந்தேக நபருக்கும் தொடர்பு இருக்கலாம் என தெரிவித்த ஜேர்மன் அதிகாரிகள் இது குறித்து விசாரணை மேற்கொள்வதாக குறிப்பிட்டனர்.

தென்மேற்கு ஜேர்மனி உள்ள 39 வயதுடைய நவநீதன் என்பவரின் வீட்டில் நடத்திய சோதனையின் பின்னரே இந்த காது இடம்பெற்றுள்ளது.

கைது செய்யப்பட்ட சந்தேக நபர் தொடர்பிலான விபரங்களை தமது தனியுரிமை சட்டங்கள் காரணமாக வெளியிடாத ஜேர்மன் அதிகாரிகள், வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பின் அங்கத்தவர் என்றும், கொலை மற்றும் கொலை முயற்சிகளுடனும் இவர் தொடர்பு கொண்டவர் என குறிப்பிட்டுள்ளனர்.

எனினும் இது குறித்த விசாரணைகள் முடிவடைந்த பின்பே, மேலதிக விபரங்களை வெளியிட முடியும் என ஜேர்மன் அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளதாக ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com