Sunday, January 20, 2019

தமிழ் தேசிய கூட்டமைப்பை பாராட்டிய லக்ஷ்மன் கிரியெல்ல

தமிழ் தேசிய கூட்டமைப்பு வடக்கு மக்களின் அபிமானத்தை பெற்ற கட்சி என்றும் அவர்கள் ஆயுத குழுக்களோ அல்லது சட்ட விரோத அமைப்பினரோ அல்ல என அமைச்சர் லக்ஷ்மன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் அமைப்பு தொடர்பில் முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுக்கள் குறித்து ஐக்கிய தேசிய கட்சியின் நிலைப்பாடு தொடர்பில் கேள்வி எழுப்பிய போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். மேலும், தமிழ் தேசிய கூட்டமைப்பு நேர்மையான வழியில் அரசாங்கத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றது எனவும், உண்மையான தீர்வுகளை பெற்றுக்கொள்ள அரசியல் அமைப்பினை அரசாங்கம் பயன்படுத்துகிறது எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

கூட்டு எதிரணி தமிழ் தேசியக் கட்சியுடன் இரகசிய உடன்படிக்கை இருப்பதாக கட்டுக்கதை கூறி ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டு வருவதாகவும் அவர் குற்றஞ்சாட்டினார். தமிழ் தேசிய கூட்டமைப்பு, இந்த நாட்டில் ஒரு தொகுதி மக்களின் பிரதிநிதிகள் எனவும் அவர் இதன்போது கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com