Sunday, January 20, 2019

நாளை முதல் முச்சக்கரவண்டி சாரதிகளுக்கு உத்தியோகபூர்வ சீருடை!

நாளை முதல் நாட்டில் உள்ள அனைத்து முச்சக்கரவண்டி சாரதிகளும் அவர்களுக்கென தயாரிக்கப்பட்ட பிரத்தியேகமான உத்தியோகபூர்வ சீருடை அணிந்து, தமது சேவைகளை முன்னெடுப்பார்கள் என்று தேசிய வீதி பாதுகாப்பு அதிகாரசபை அறிவித்துள்ளது. இதற்கான அனைத்து நடவடிக்கைகளும் பூர்த்திசெய்யப்பட்டுள்ளதாக சபையின் தலைவர் சிசிர கோதாகொட குறிப்பிட்டுள்ளார்.

முச்சக்கர வண்டி சாரதிகளை அடையாளம் காண்பதில் உள்ள சிக்கல் நிலமையுடன், சில முச்சக்கரவண்டி சாரதிகள், நாகரிகமான முறையில் உடைகளை அணிந்து பயணிப்பதில்லை எனவும் அவர் இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

இதன் காரணமாக, சுமார் கடந்த 2 வருடங்களாக முன்னெடுக்கப்பட்ட செயலமர்வுகளில், தமக்கான சீருடையொன்றை வழங்குமாறு முச்சக்கரவண்டி சாரதிகளால் கோரிக்கை விடுக்கப்பட்டதாக தேசிய வீதிப் பாதுகாப்பு அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது. ஆனாலும், இந்த நடவடிக்கைக்கு சில முச்சக்கரவண்டி சாரதிகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com