Sunday, January 20, 2019

மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உதவித்தொகை அதிகரிப்பு

இலங்கை உயர்தொழிநுட்பவியல் கல்வி நிறுவனங்களில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டுவரும் உதவித் தொகையை அதிகரிப்பதற்கு தீர்மானித்துள்ளதாக உயர் கல்வி அமைச்சர் ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார்.

நாத்தாண்டியாவில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். தற்போது வழங்கப்பட்டு வரும் 1500 ரூபா உதவித் தொகையை 2500 ரூபாவாக உயர்த்துவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார். நாடு முழுவதும் உள்ள சுமார் 6000 மாணவர்கள் இந்த உதவித் தொகையை பெற்றுவருவதாகவும் அவர் தெரிவித்திருந்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com