Sunday, January 20, 2019

சிறுபான்மை மக்களின் வாக்குகளே முக்கியம் - அசாத் சாலி

சிறுபான்மை மக்களின் வாக்குகளே எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றியைத் தீர்மானிக்கும் என, ஆளுநர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.

இன்று கண்டிக்கு சென்று மகாநாயக்க தேரர்களைச் சந்தித்து ஆசிபெற்ற மேல் மாகாண ஆளுநர் அசாத் சாலி, பின்னர் ஊடகவியலாளர்களை சந்தித்தபோது இவ்வாறு கூறினார். தற்போதைய சூழ்நிலையில் கட்சி ஒன்றை பிரதிநிதித்துவப்படுத்தும் வேற்பாளரை அறிவிக்காது, பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்தினால் மாத்திரமே வெற்றிபெற முடியும்.

கடந்த 2015 ஆண்டு நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் ரணில் விக்ரமசிங்கவின் பெயரும், சோபித்த தேரரின் பெயரும் முன்னிலையில் இருந்தது. அப்போது ரணில், சோபித்த தேரரிடம் போட்டியிடக் கூடாது நான்தான் வேட்பாளர் என்றார். ஆனால் இரண்டாவது நாளில் அவர் வேட்பாளராக இல்லை. சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளரை அழைத்துவந்து பொது வேட்பாளராக்கினார்கள். அதே நிலைமைதான் இப்பொழுதும் ஏற்படும்.

எதிர்த் தரப்பிலும் ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் குழப்பமே நிலவுகின்றது. ஒருமுறை கோட்டபாய ராஜபக்ச என்கிறார்கள். பின்னர் பசில் ராஜபக்ச என்றனர், இந்த சமயத்தில் சமல் ராஜபக்ச தானே ஜனாதிபதி வேட்பாளர் என்கிறார். இவ்வாறான குழப்பங்களில் மஹிந்த ராஜபக்ச தான் யாரையும் பெயரிடவில்லை என்று கூறுகிறார். இது இவ்வாறு இருக்க குமார வெல்கம கூறுகிறார், தான் மஹிந்தவைத் தவிர வேறு யாரையும் ஆதரிக்கப்போவதில்லை என்று. இது அவர்களுடைய தனிப்பட்ட விடயம். ஆனால் இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைத்து பொது வேட்பாளர் ஒருவரே நிறுத்தப்பட வேண்டும்.

நாட்டின் நிலைமைக்கு ஏற்ப பொதுவேட்பாளர் ஒருவர் களமிறக்கப்பட்டால் மாத்திரமே, பெற்றிபெற முடியும். அத்துடன் நாட்டின் தலைவரை தீர்மானிக்கும் அதிகாரத்தில் சிறுபான்மையின மக்களின் வாக்குள் மிக முக்கியமானது என்றும் அசாத் சாலி கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com