Sunday, January 20, 2019

கழுதை தேய்ந்து கட்டெறுப்பான நிலையில் விக்கி! முதலாவது கூட்டத்தில் கலந்துகொண்டோர் 20 பேர் பதவி 25 பேருக்கு!

முன்னாள் வட மாகாண முதலமைச்சர் தமிழ் தேசியக் கூட்டமைப்பிலிருந்து வெளியேறி தனிவழி சென்று புதியதோர் அரசியல் கட்சியொன்றை ஆரம்பித்திருந்தார் என்பது யாவரும் அறிந்த விடயம்.

தனது புதிய கட்சி ஆரம்பம் தொடர்பாக தெரியப்படுத்தியிருந்த விக்கினேஸ்வரன் இன்று 20.01.2019 பிரமாண்டமான ஒன்றுகூடலுடன் கட்சியின் கொள்கை விளக்கத்துடன் நிர்வாகத் தெரிவு மேற்கொள்ளப்படும் என்றும் அறிவித்திருந்தார்.

இந்நிகழ்வில் தனக்கு வாக்களித்த அத்தனை மக்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்த்த விக்கினேஸ்வரன் பல்லாயிரக்கணக்கான மக்களை கொள்ளக்கூடிய மண்டபம் ஒன்றை தேடும் பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

குறித்த முதலாவது ஒன்றுகூடலுக்கு சுயமாக வரக்கூடிய மக்களின் எண்ணிக்கையை கணக்கெடுத்துக்கொண்டிருந்த விக்கினேஸ்வரனுக்கு மக்கள் சுயமாக இணைவதற்கு அப்பால் தனது வலதுகரமாக இருந்த ஐங்கரநேசனே வரமாட்டார் என்பது தெரியவந்தது.

விக்கினேஸ்வரனுடன் இணைவதாக தெரிவித்திருந்த அரசியல் கட்சிகள், பிரபலங்கள் எவரும் அற்ற நிலைலையில் வெறும் 20 பேருடன் இன்றைய கூட்டம் இடம்பெற்றுள்ளது. மண்டபங்களை எடுத்து வெறும் ஆசனங்களை காட்டினால் „கழுதை தேய்ந்து கட்டெறுப்பான நிலையில்' தான் நிற்பது தெரிந்துவிடும் என்பதை அறிந்து கொண்ட விக்கினேஸ்வரன் தனது வாடகை வீட்டின் வரவேற்பு அறையில், கூட்டத்தை நிகழ்த்தியுள்ளார்.

இந்நிகழ்வில் கலந்து கொண்ட அத்தனைபேருக்கும் பெருமனதுடன் விக்கியர் பதவிகளை வழங்கியுள்ளார். அத்துடன் கூட்டத்திற்கு சமூகமளிக்காக சுமார் ஐந்து பேருக்கும் பதவிகள் வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைநெட் அறிகின்றது.

விக்கினேஸ்வரன் இன்றைய கூட்டத்தை தனது இல்லத்தில் நிகழ்த்தியதில் பார்க்கவும், தனது குருசாமியான காமச்சுவாமி பிறேமானந்தாவுக்கு புளியங்குளத்தில் கட்டிவைத்திருக்கும் ஆலயத்தில் நிகழ்த்தியிருந்தால் சிலநேரம் 20 மேற்பட்ட மக்கள் கூட்டத்தில் கலந்து கொண்டிருப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

விக்கினேஸ்வரன் தனக்கு வழங்கப்பட்ட ஆணையை சரிவர நிறைவேற்றாது, வெறும் இனவாதத்தை கக்குவதன் ஊடாக மாத்திரம் அரசியலில் நிலைத்துக்கொள்ள முடியும் என்ற கணக்கில் செயற்பட்டார். அதற்கான பெறுபேறினை அவர் தற்போது பெற ஆரம்பித்துள்ளார் என அரசியல் அவதானிகள் தெரிவிக்கின்றனர்.

விக்கினேஸ்வரனின் தமிழ் தேசியக் கூட்டணி என்ற புதிய கட்சியின் புதிய பதவிகளை பெற்றுக்கொண்டோரின் விபரம்.

கட்சியின் செயலாளர்- க.வி.விக்னேஸ்வரன்

பொருளாளரும், உபசெயலாளரும், பொருளாதார விவகாரங்களும்- பேராசிரியர் வி.சிவநாதன்

உப செயலாளர், கொள்கை பரப்பு- க.அருந்தவபாலன்

இணை உபசெயலாளர், நிர்வாகம்- எஸ்.சோமசுந்திரம் (மட்டக்களப்பு)

இணை உபசெயலாளர், நிர்வாகம்- ஆ.ஆலாலசுந்தரம் (கிளிநொச்சி)

உபசெயலாளர் மகளிர் அணி- திருமதி இளவேந்தி நிர்மலராஜன்

உப செயலாளர், இளைஞர் விவகாரங்கள் (8 மாவட்டங்கள்)- கலாநிதி என்.கார்த்திகேயன்

உபசெயலாளர், ஊடகமும், செயற்றிட்ட ஆக்கமும்- தவச்செல்வன் சிற்பரன் (தீவகம்)

உபசெயலாளர், சமூக பாதுகாப்பு- பொறியியலாளர் கெங்காதரன் (முல்லைத்தீவு)

உபசெயலாளர், கலைகலாச்சாரமும் பாரம்பரியமும் தம்பு சிவசுப்ரமணியம்

உபசெயலாளர், சட்டவிவகாரங்கள்-

மத்தியகுழுவின் நிர்வாகக்குழு உறுப்பினர்கள்

தொகுதி அமைப்பாளர், பட்டிருப்பு- ஜி.கிருஸ்ணபிள்ளை

இளைஞர் அணி வட,கிழக்கு மாகாண பொறுப்பாளர்- கிருஸ்ணமேனன் (வடமராட்சி)

இளைஞர் அணி தொகுதி பொறுப்பாளர், அம்பாறை- வி.அமல்

தொகுதி அமைப்பாளர், வவுனியா- செல்லத்தம்பி சிறிதரன்

இளைஞர் அணி தொகுதி பொறுப்பாளர், மட்டக்களப்பு- புவனராஜ்

தொகுதி அமைப்பாளர், கிளிநொச்சி- அந்தோனி கபிரியேல்

தொகுதி அமைப்பாளர், மட்டக்களப்பு- எம்.உதயராஜ்

தொகுதி அமைப்பாளர், ஊர்காவற்றுறை- அன்னலிங்கம் அன்னராசா

தொகுதி அமைப்பாளர், திருகோணமலை- சிவசுப்ரமணியம் நந்தகுமார்

தொகுதி அமைப்பாளர், வடமராட்சி- இரா.மயுரதன்

தொகுதி அமைப்பாளர், மன்னார்- அன்புராஜ்

புஸ்பராசா சுமிதா

தொகுதி அமைப்பாளர், நல்லூர்- ராஜா துரைசிங்கம்

தொகுதி அமைப்பாளர், மானிப்பாய் – வி.ஞானமூர்த்தி



0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com