Sunday, January 20, 2019

8000 மாணவர்களுக்கு வாய்ப்பு

கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என வௌியான தகவல் தவறானது என்று மறுப்பு தெரிவித்த கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் கே.எம்.எச். பண்டார, இந்தத் தடவை 8,000 மாணவர்களை தேசிய கல்வியியல் கல்லூரிக்கு இணைத்துக் கொள்ளவுள்ளதாக, தெரிவித்துள்ளார்.

இதற்கான வர்த்தமானி அறிவித்தலை இம்மாத இறுதியில் வௌியிடுவதற்கு நடவடிக்கை எடுத்துள்ளதாக, கல்வியியற் கல்லூரியின் ஆணையாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார். கடந்த 3 வருடங்களாக, கல்வியியற் கல்லூரிக்கு மாணவர்கள் இணைத்துக் கொள்ளப்படவில்லை என்று அண்மையில் கூறப்பட்ட செய்தியில் உண்மையில் இல்லை, மாணவர்கள் தொடர்ந்தும் கல்வியியற் கல்லூரிகளில் இணைத்துக் கொள்ளப்படுகின்றார்கள் என்றும் அவர் கூறினார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com