Sunday, January 20, 2019

ஜிந்துபிட்டியில் இன்றும் துப்பாக்கி சூடு - ஒருவர் காயம். கை கால் கட்டப்பட்ட நிலையில் கொழும்பில் சடலம் மீட்பு

கொழும்பு, ஜிந்துபிட்டி பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் ஒருவர் காயமடைந்துள்ளார். மோட்டார் சைக்கிளில் சென்றவரை இலக்கு வைத்தே இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இந்த துப்பாக்கி சூட்டுக்கு இலக்கானவர் கொழும்பு 13 இல் வசிக்கும் 34 வயதுடைய அன்ரன் மைக்கல் குரூஸ் என்பவர் என, பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். துப்பாக்கிச் சூடு மேற்கொள்ளப்பட்டவுடன் அதற்கு இலக்கானவர் தனது மோட்டார் சைக்கிளிலேயே காயத்துடன் பொலிஸ் நிலையத்துக்கு சென்றுள்ளார். குறித்த நபர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்தநிலையில் பொலீஸார் இந்த துப்பாக்கி பிரயோகம் குறித்த விசாரணைகளை ஆரம்பித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இதேநேரம் கொழும்பு - கொள்ளுபிட்டியில் உள்ள வீடொன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் எரிக்கப்பட்ட ஒருவருடைய சடலம் மீட்கப்பட்டுள்ளது. நேற்றையதினம் காலை 11.45 மணியளவில் குறித்த சடலத்தை பொலீஸார் மீட்டுள்ளனர்.

கட்டில் ஒன்றில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் குறித்த சடலம் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சடலமாக மீட்கப்பட்டவர் அதுருகிரிய, அரங்கல பகுதியை சேர்ந்த 49 வயதுடைய சேனக ஶ்ரீலால் ஜயசிங்க என்பவர் என்று பொலீசார் தெரிவித்துள்ளனர். சம்பவம் தொடர்பில் கொள்ளுபிட்டி பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com