Sunday, January 20, 2019

ஊடகவியலாளர்களுக்கு மருத்துவ சேவையை பெற்றுக்கொள்ள விஷேட ஏற்பாடு

ஊடகவியலாளர்கள் தமது மருத்துவ சேவையினை பெற்றுக்கொள்ள வைத்தியசாலையில் விசேட ஏற்பாடுகளை செய்து தருவதற்கு தயாராகவுள்ளேன் என்று டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் தெரிவித்தார். நுஜா ஊடக அமைப்பின் கூட்டம் நேற்றைய தினம் சாய்ந்தமருதில் ஒன்றியத்தின் தலைவர் எஸ்.எம்.அறூஸ் தலைமையில் இடம்பெற்றது.

இதன்போது ஒன்றியத்தின் தேசிய தவிசாளர் றியாத் ஏ மஜீட் அவர்களினால் விடுக்கப்பட்ட கோரிக்கையினை அஷ்ரஃப் ஞாபகார்த்த வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் டொக்டர் ஏ.எல்.எப்.றஹ்மான் ஏற்றுக்கொண்டு, அதற்கான சகல ஏற்பாடுகளையும் செய்து தருவதோடு ஊடகவியலாளர்களுக்கென்று நாள் ஒன்றையும் விசேடமாக ஒதுக்கித் தருவதற்கான ஏற்பாடுகளையும் செய்துதருவதாக வாக்குறுதி வழங்கினார்.

மேலும், ஊடகத்துறை சகல துறைகளுடனும் பின்னிப்பிணைந்துள்ள துறையாகும். இதனை பிரித்துப் பார்க்க முடியாது. ஊடகவியலாளர்கள் நாட்டின் அபிவிருத்திற்கும், இன நல்லிணக்கத்திற்கும், தான் சார்ந்த இனத்தின் உரிமைக்காகவும் அர்ப்பணிப்புடன் பணியாற்றுகின்றனர் எனவும் அவர் மேலும் தெரிவித்தார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com