Friday, January 18, 2019

மஹிந்த மீது சீற்றம் கொள்கிறார் விஜய கலா

வடக்கு, கிழக்கில் மஹிந்த அரசாங்கத்தினாலேயே போதைப்பொருள் பாவனை அறிமுகப்படுத்தப்பட்டதாக கல்வி இராஜாங்க அமைச்சர் விஜேயகலா மகேஸ்வரன் தெரிவித்தார். கொழும்பு இந்துக் கல்லூரியில் நிகழ்ந்த நிகழ்வொன்றில் கலந்து கொண்டிருந்தபோதே அவர் இந்தக் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

குறித்த நிகழ்வில் மேலும் கருத்துரைத்த கல்வி ராஜாங்க அமைச்சர், அனைத்து மாணவர்களுக்கும் சட்டக்கல்வியை உறுதிப்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டார். சட்டக்கல்வியை மாணவர்கள் கற்பதன் மூலம் எதிர்காலத்தில் தமது பிரச்சினைகளுக்கு எவ்வாறு முகம் கொடுப்பது என்பது தொடர்பில் தெளிவான முடிவினை எடுப்பார்கள் என்றும் அவர் கூறினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com