Friday, January 18, 2019

ஜனாதிபதி மீது அழுத்தமான குற்றச்சாட்டை முன்வைக்கின்றது மனித உரிமை கண்காணிப்பகம்

இலங்கை, பொறுப்புக் கூறலை உறுதிப்படுத்துவதில் இருந்து தோல்வியடைந்துள்ளது என மனித உரிமை கண்காணிப்பகம் குற்றம் சுமத்தியுள்ளது.

இலங்கையில் அண்மைய நாட்களில் தொடர்ந்த அரசியல் நெருக்கடிநிலை காரணமாக, உள்நாட்டு யுத்தத்தின் போது இடம்பெற்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பில் உண்மையை கண்டறிவதற்கும், நீதியை நிலைநாட்டுதலுக்காக ஏற்கனவே முடங்கிய நிலையில் உள்ள செயற்பாடுகளை மேலும் முடங்கியுள்ளது என்ற விசனத்தை மனித உரிமை கண்காணிப்பகம் முன்வைத்துள்ளது.

நடப்பாண்டுக்கான மனித உரிமை நிலைமை தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் மனித உரிமை கண்காணிப்பகத்தின் தெற்காசிய பணிப்பாளர் மீனாட்சி கங்குலி தெரிவிக்கியில், ஜனதிபதி மைத்திரிபால சிறிசேனவின் தற்போதைய அரசியல் நகர்வுகள் காரணமாக சுமார் 30 வருடங்கள் நீடித்த யுத்தத்தினால் பாதிக்கப்பட்டவர்களில் பலரும், தம்முடைய நீதி தொடர்பில் நம்பிக்கை இழந்து வரும் நிலையில்தற்போதையை இலங்கையின் நிலை மக்களின் நீதி விடயத்தில் மேலும் மந்தமான போக்கையே காட்டுகின்றது. இந்த துயர சம்பவமானது, பொறுப்பு கூறல் தொடர்பிலே சிறிசேனவின் அரசாங்கம் விரைவானதும் அர்த்தபூர்வமானதுமான நகர்வுகளை எடுக்க தவறி விட்டத்தை கோடிட்டுக்காட்டி நிற்கின்றது என்று அவர் குற்றம் சுமத்தினார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com