Friday, January 18, 2019

மே 21, ஜூலை 16 ல் வானில் தோன்றும் அதிசயம் - யாழ் மற்றும் திருகோணமலையில் மேலும் விசேஷம்

இந்த வருடத்தில் இரண்டு சந்திர கிரகணங்களையும் மூன்று சூரிய கிரகணங்களையும் மக்களை பார்வையிட முடியும் என கொழும்பு பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது. மே மாதம் 21 ஆம் திகதி மற்றும் ஜூலை மாதம் 16 ஆம் திகதிகளில் சந்திர கிரகணம் தென்படும் என, புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் முதலாவது சூரிய கிரகணம் கடந்த 6 ஆம் திகதி தென்பட்டுள்ளதுடன், ஜூலை மாதம் 02 ஆம் திகதி மற்றும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதிகளிலும் சூரிய கிரகணங்கள் தென்படும்.

இதில் எதிர்வரும் ஜூலை மாதம் 16 ஆம் திகதி உருவாகும் சந்திர கிரகணத்தில் அரைவாசியையும் டிசம்பர் மாதம் 26 ஆம் திகதி தோன்றும் சூரிய கிரகணத்தையும் இலங்கை மக்கள் காண முடியும் என்று பேராசிரியர் மேலும் தெரிவித்தார்.

குறிப்பாக யாழ்ப்பாணம் முதல் திருகோணமலை வரையான பகுதிகளில் வாழும் மக்களால் டிசம்பர் மாதம் உருவாகும் சூரிய கிரகணத்தை முழுமையாயாக அவதானிக்க முடியும் எனவும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் புவியியல் விஞ்ஞான ஆய்வுப் பிரிவின் பேராசிரியர் சந்தன ஜயரத்ன தெரிவித்துள்ளார்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com