Friday, January 18, 2019

சவேந்திர சில்வாவிற்கு பதவி - நேர்மை எவ்வாறு நிரூபிக்கப்படும் ? ஐ.நா கேள்வி

ஐ.நா.வினால், போர்க்குற்றங்களில் ஈடுபட்டதாக அடையாளப்படுத்தப்பட்டுள்ள மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவை
இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக நியமித்தமை கவலையளிப்பதாக, அமெரிக்க நாடாளுமன்றத்தின் வெளிவிவகாரக் குழுத் தலைவர் எலியட் ஏஞ்சல் தெரிவித்துள்ளார்.

மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வா இலங்கை இராணுவத் தலைமை அதிகாரியாக நியமிக்கப்பட்டமையால், அமெரிக்கா மற்றும் இலங்கைக்கு இடையிலான பாதுகாப்பு ஒத்துழைப்புக்கு பாதிப்பை ஏற்படுத்துமெனவும் அவர் எச்சரிக்கை செய்துள்ளார்.

போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்களில் முக்கிய ஒருவராக ஐ.நா.வினால் இங்கணபட்ட சவேந்திர சில்வாவிற்கு உயர் பதவி வழங்கப்பட்டுள்ள நிலையில், போர்க்குற்றவாளிகளை பொறுப்புக்கூற வைப்பதில் நேர்மை எவ்வாறு நிரூபிக்கப்படும்? எனவும் எலியட் ஏஞ்சல் கேள்வி எழுப்பியுள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com