Friday, January 18, 2019

லசந்த, கீத் நொயர் கொலையில் ஒற்றுமை - வெளியாகியது புதிய தகவல்

லசந்த விக்கிரமதுங்க படுகொலை மற்றும் கீத் நொயார் மீதான தாக்குதல் மற்றும் அவரை சித்திரவதைசெய்தமை ஆகிய குற்றங்கள் ஒரே விதமாக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளவையென குற்றத்தடுப்பு விசாரணை திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றத்திடம் தெளிவுபடுத்தியுள்ளனர். கல்கிசை நீதிமன்றத்தின் நீதிபதி முஹம்மட் மிஹால் முன்னிலையில் நேற்றைய தினம் இந்த வழக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே, குறித்த அதிகாரிகள் இதனைத் குறிப்பிட்டுள்ளனர்.

சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் லசந்த விக்கிரமதுங்கவின் படுகொலை தொடர்பில் சந்தேகத்தின் பேரில் கைதுசெய்யப்பட்ட முதலாவது, இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேக நபர்கள் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில் குறித்த வழக்கு விசாரணை நேற்றும் நடைபெற்றது.

முதலாவது சந்தேக நபரான இராணுவ புலனாய்வு பிரிவின் சார்ஜன்ட் மேஜர் பிரேமானந்த உதுலாகம, இரண்டாவது சந்தேக நபரான கல்கிஸை குற்றத்தடுப்பு பிரிவு நிலையப் பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் திஸ்ஸ சுகதபால மற்றும் மூன்றாவது சந்தேக நபரான முன்னாள் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மாஅதிபர் பிரசன்ன நாணயக்கார ஆகியோர் நேற்று நீதிமன்றத்தில் ஆஜராகியிருந்தனர்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com