Friday, January 18, 2019

சரத் பொன்சேகாவை களமிறக்க முடியும் என்றால் ஏன் சஜித் பிரேமதாசவை தீர்மானிக்க முடியாது? - திலிப் வெதஆராச்சி கேள்வி

சஜித் பிரேமதாச, ஐக்கிய தேசியக் கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் என்று, பிரதி அமைச்சர் திலிப் வெதஆராச்சி நேற்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி வேட்பாளராக ஐக்கிய தேசியக் கட்சியின் சார்பில் சரத் பொன்சேகாவை களமிறக்க முடியும் என்றால், ஏன் கட்சியிலுள்ள பிரதித் தலைவர் சஜித் பிரேமதாசவை வேட்பாளராக தீர்மானிக்க முடியாது என்றும் திலிப் வெதஆராச்சி கேள்வி எழுப்பினார். கட்சியின் மத்திய செயற்குழுவில் தீர்மானம் எடுத்தால், பிரதமரும் அதனை ஏற்றே ஆக வேண்டும் எனவும் பிரதி அமைச்சர் மேலும் குறிப்பிட்டார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com