Friday, January 18, 2019

மக்களின் தேவைகளை விரைந்து நிறைவேற்றப் போகின்றாராம் ராதா கிருஷ்ணன்.

மிக குறுகிய காலத்திலேயே பொது மக்களின் அனைத்து தேவைகளும் விரைந்து நிறைவேற்றப்படும் என, அமைச்சர் வேலுசாமி இராதாகிருஸ்ணன் உறுதி அளித்துள்ளார்.

அண்மையில் நியமிக்கப்பட்ட புதிய அமைச்சரவையில், பிரதமர் ரணில் விக்ரமசிங்க, தமக்கு அமைச்சர் பதவி வழங்கப்படவில்லையென்று குற்றம் சுமத்தி வந்த வேலுசாமி ராதாகிருஷ்ணன், அமைச்சரவை அந்தஸ்தில்லாத, விசேட பிரதேசங்களுக்கான அபிவிருத்தி அமைச்சராக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன முன்னிலையில் நியமனம் பெற்றார்.

இந்த நிலையில், அமைச்சர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் இன்று தனது கடமைகளை உத்தியோகப்பூர்வமாக பொறுப்பேற்றுக் கொண்டார்.

இதனை தொடர்ந்து அங்கு ஒழுங்கு செய்யப்பட்டிருந்த ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, கருத்து வெளியிட்டார்.

நாடு முழுவதிலுமுள்ள அபிவிருத்தி தேவைகளை கொண்ட பிரதேசங்களை இனங்கண்டு, அந்த பிரதேச அபிவிருத்திக்கான அனைத்து நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும் என்றும் அமைச்சர் ராதாகிருஷ்ணன் இதன்போது உறுதியளித்துள்ளார்.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com