Friday, January 18, 2019

புத்தளத்தில் 100 கிலோ வெடி மருந்து மீட்பு.

வனாத்தவில்லு, மங்களபுர, கரடிபுவல் பிரதேச தென்னை மர தோட்டத்தில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 100 கிலோ கிராம் வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை குற்றப் புலனாய்வுப் பிரிவினர் மீட்டுள்ளனர்.

குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கப்பெற்ற ரகசியத் தகவல் ஒன்றின் அடிப்படையில் நேற்று (17) மாலை குறித்த வெடிபொருட்கள் மற்றும் இரசாயன பொருட்களை அவர்கள் மீட்டுள்ளனர்.

விசேட அதிரடிப்படையின் குண்டு செயலிழக்கச் செய்யும் பிரிவினரே மேற்படி வெளிபொருட்களை மீட்கும் பணியில் ஈடுபட்டிருந்தனர் என்றும் குற்றப்புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருவதாகவும் அறியக் கிடைக்கின்றது.

வெடிபொருட்களுடன் 100 டெட்டனேட்டர்களும் மீட்கப்பட்டமை இப்பொருட்களுடன் தொடர்புடையதாக சீஐடி யினர் இதுவரை 4 பேரை கைது செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.


0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com