Friday, January 18, 2019

சீரழிந்த இந்த நாட்டை மஹிந்த குடும்பம் கட்டியெழுப்பும். ஜனாதிபதி வேட்பாளரும் எமது குடும்பத்திலிருந்தே! நாமல் ராஜபக்ச.

கடந்த 2015 ஆம் ஆண்டுக்குப் பின்னர் இந்த நாடு சீரழிந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச குற்றம் சுமத்தியுள்ளார். எனினும் ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு அன்ஹா பின்னர், சீரழிந்த இலங்கை மீண்டும் கட்டியெழுப்பப்படும் என நாமல் ராஜபக்ச நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

அடுத்து வரப்போகும் ஜனாதிபதித் தேர்தலில், ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் கட்டாயமாக ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார் என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

தமது குடும்பம் ஒருபோதும் நாட்டையும், போர் வீரர்களான இராணுவத்தினரையும் சர்வதேச சமூகத்துக்குக் காட்டிக் கொடுக்கபோவதில்லை.

நாட்டிலுள்ள அனைத்து இன மக்களும் நிம்மதியுடன் சுதந்திரமாக வாழ வேண்டும் என்பதே ராஜபக்ஷ குடும்பத்தின் நோக்கம் என்றும் நாமல் ராஜபக்ச சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்தோடு ராஜபக்ஷ குடும்பத்தை ஊழல் பேர்வழிகள், மோசடியாளர்கள் என்று பொய்யுரைப்பவர்கள் தாங்கள் செய்த ஊழல், மோசடிகளை மறந்து விடக்கூடாது என்றும் கூறியுள்ளார்.

இதேவேளை, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் ராஜபக்ஷவின் குடும்பத்திலிருந்தே தெரிவுசெய்யப்படுவார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் சமல் ராஜபக்ஷ அண்மையில் தெரிவித்திருந்தார்.

அதுபோல் மக்கள் விரும்பினால் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடத் தயார் என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவும் அறிவித்திருந்தார். இவ்வாறான ஒரு நிலையில், நாமல் ராஜபக்ஷவும் தற்போது இவ்வாறு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com