Friday, January 18, 2019

கோட்டாவிற்கு எதிரான வழக்கு, தொடர் விசாரணைக்கு

D .A. ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிப்பதற்கு 3 கோடி 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பில், முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தாபய ராஜபக்ஷ உள்ளிட்ட 7 பேருக்கு எதிராக சட்ட மா அதிபர் திணைக்களத்தினால் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கை எதிர்வரும் 22 ஆம் திகதி முதல் தினமும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளது.

குறித்த வழக்கு சம்பா அபயக்கோன் , சம்பத் விஜேரத்ன மற்றும் சம்பா ராஜரத்ன ஆகிய நீதிபதிகள் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே இந்த முடிவு எட்டப்பட்டுள்ளது.

தங்காலை மெதமுலனை D.A. ராஜபக்ஷ அருங்காட்சியகம் நிர்மாணிப்பதற்கு 3 கோடி 39 இலட்சம் ரூபா அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்தியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பிலேயே, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் உள்ளிட்ட 7 பேர் தொடர்பிலான வழக்கு விசாரணை இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

0 comments :

Copyright www.ilankainet.com All right reserved.
Designed and Hosted By : ilankainet.com
To contact us : ilankainet@gmail.com