பெருந்தோட்ட மக்களுக்காக இன்று ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான போராட்டம், சற்று முன்னர் கொழும்பில் ஆரம்பம்.
பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1000 ரூபாய் அடிப்படை வேதனம் வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்தி இன்றைய தினம் ஒழுங்கு செய்யப்பட்ட பிரதான போராட்டம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு ஐந்துலாம்புச் சந்தியில் இந்த போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஒருமீ சிவில் சமூக அமைப்புகளின் ஒன்றியம், இலங்கை ஆசிரியர் சேவை சங்கம், இலங்கை தொழில்நுட்ப வர்த்தக மற்றும் பொது தொழிலாளர் சங்கம், இலங்கை வங்கிசேவை சங்கம், ஐக்கிய தொழிலாளர் சம்மேளனம், இலங்கை தோட்ட சேவை சங்கம் உள்ளிட்ட பல்வேறு சங்கங்களின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
இந்த போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், தற்போது கொழுப்பு கோட்டை நோக்கி பேரணியாகச் செல்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு நாளாந்த அடிப்படைச் சம்பளமாக ஆயிரம் ரூபாயை வழங்க வேண்டுமென வலியுறுத்தி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் 1000 ரூபாய் இயக்கம் அமைப்பின் ஏற்பாட்டில் யாழ் மத்திய பேருந்து நிலையத்தில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
0 comments :
Post a Comment